தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பக்கம் உள்ள ஒழுகைமங்கலத்தில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.