கடையம் நீராவி மாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

கடையம், மார்ச் 24: கடையம் குட்டிகுளம் நீராவி மாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். கடையம் குட்டிகுளம் நீராவி மாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, மூர்த்தி ஹோமம், வேத பாராயணம், விமான பூஜை தொடர்ந்து கலசத்திற்கு அபிஷேக தீபாராதனை நடந்தது.

மூலவர் தளவாய் மாடசுவாமி மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஆறுமுகம், சரவணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: