நாகர்கோவில், மார்ச் 24 : குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பல ஆண்டு காலம் நம் நாட்டுக்காக சேவை செய்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் நம் நாட்டுக்காக சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக, தமிழகத்தில் வரும் 6.4.2021 அன்று சட்டமன்ற தேர்தலில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. குமரி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றிட அனைவரும் முன் வர வேண்டும். இதுவரை நடந்த தேர்தல்களில் தங்களின் ஒத்துழைப்பால் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் தேர்தல் நடைபெற்று இருக்கிறது.