பல்வேறு வழக்குகளில் தொடர்பு குண்டர் சட்டத்தில் 2 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

தஞ்சை, மார்ச் 23: மதுரை மாவட்டம் மேலஅனுப்பாண்டி டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் மலைராஜ். இவரது மகன் சஞ்சய் (எ) சஞ்சய்குமார்(22). இதேபோல் பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது மகன் கபி(எ) கபிலன்(22). இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தஞ்சை எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் ஜவகர் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து சஞ்சய்குமார், கபிலன் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: