மார்ச் 20: தேன்கனிக்கோட்டை அருகே காப்பு காட்டிலிருந்து தவறி வந்த மான் முள்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்கினங்கள் ஏராளமாக உள்ளன. கோடை துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு, தaண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை காப்பு காட்டிலிருந்து தண்ணீர் தேடி வெளியேறிய மான் ஒன்று, பெண்ணங்கூர் கிராமத்திற்குள் புகுந்தது.