விழுப்புரம், மார்ச் 20: திமுகவின் வெற்றியை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகார் குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்கும் வகையில், சாதி குறித்து தவறான தகவலை வெளியிட்டு, கட்சியின் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளருமான பொன்முடிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.