டெல்லி: அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.25,000 பெறுவோருக்கும் பி.எஃப். நிதி திட்டத்தை விரிவுபடுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேர்வதற்கான வருமான வரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. பி.எஃப். திட்டத்துக்கான புதிய ஊதிய வரம்பு 2027 ஏப்ரலில் அமலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
