காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா வரும் 6 ம் தேதி ஆளுநர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்திற்கு சென்றதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டு இருக்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: