அடுத்தகட்ட போராட்டம்? கரப்பான் பூச்சி கட்சி ஆக.5ம் தேதி ஆலோசனை: மகாராஷ்டிராவில் நடக்கிறது

சத்ரபதி சம்பாஜிநகர்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. மாணவர்களின் கோரிக்கைக்கு பணிந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக மீண்டும் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக கரப்பான் பூச்சி கட்சி கூறி உள்ளது.

இந்நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வரும் 5ம் தேதி மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே வீட்டில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் சிஜேபியின் திட்டங்கள் அறிவிககப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: