வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளி எதிரே முட்புதரில் மான்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று காஞ்சிபுரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு, முட்புதரில் பதுங்கியிருந்த புள்ளிமானை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்போவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகார்கள் கூறுகையில், “காஞ்சிபுரம் பகுதியில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான திருகாழிமேடு அல்லாபாத் ஏரி தற்போது தூர்வாரப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள் திசைமாறி பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளன. அவையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்” என்றனர். இதுபோல் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு வல்லப்பாக்கம் பகுதியில் ரயிலில் அடிபட்டு புள்ளிமான் ஒன்று இறந்தது.
