செய்தியாளர்களை தாக்கிய சோளிங்கர் எம்எல்ஏ கபில் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

ராணிப்பேட்டை: செய்தியாளர்களை தாக்கிய சோளிங்கர் எம்எல்ஏ கபில் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வலியுறுத்தியுள்ளார்.

“பத்திரிகையாளர்களை தாக்குவது கடும் கண்டனத்துக்கு உரியது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள ஊடகத்துறை நாட்டு நடப்புகளை வெளிச்சம் போட்டு காட்டும் பணியை செய்து வருகிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ஊடகத்துறையினரை தமிழக முதல்வர் சந்திக்கவில்லை.

தற்போது அவரது கட்சி எம்எல்ஏ செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எமர்ஜென்சியை விட மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. மக்களுக்கு வரும் தேர்தல்களின் சரியான பதிலடி கொடுப்பார்கள். செய்தியாளர்களை தாக்கிய சோளிங்கர் எம்எல்ஏ கபில் மற்றும் அவரது கட்சியினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: