உசிலம்பட்டியில் ரூ.17.53 லட்சம் பணம் பறிமுதல் 5 கிலோ பறிமுதல்

உசிலம்பட்டி, மார்ச் 17: உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உசிலம்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் வைப்பதற்காக காரில் உரிய ஆவணமின்றி ரூ.17 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் விஜயலட்சுமியிடம் ஒப்படைக்க, அவர் அதனை உசிலம்பட்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

இதேபோல் மற்றொரு காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.53 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories: