விழுப்புரம்: அய்யூர் அகரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது வால்வோ பேருந்து மோதியதால், பின்னால் வந்த கார், டெம்போ ட்ராவலர் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக் மற்றும் காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மேலும் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
