ஈரோடு, மார்ச் 16: ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சித்தோடு பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட சித்தோடு, கன்னிமார்காடு, தந்தை பெரியார்நகர், ராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் முத்துசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தந்தை பெரியார் நகரில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பஸ் போக்குவரத்து, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது குறித்தும், இது குறித்து சித்தோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேட்பாளர் முத்துசாமியிடம் எடுத்துக்கூறினர்.