இளைஞர்களின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி

 

டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் நலனை காக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகரில் மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சூழலிலும், நாடாளுமன்றத்தில் கடும் மோதல் நிலவும் நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டார். “நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.

“மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது அமைகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பவிடப்படமாட்டார்கள்,” என்று பிரதமர் உறுதியளித்தார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Related Stories: