விமான நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1500க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பிய சரத் சுப்பிரமணியன், என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். VPN, Dark Web மூலம் போலி இமெயில்களை அனுப்பி வந்துள்ளார். ஒரு இடத்தில் தவறுதலாக தனது சொந்த இமெயில் முகவரியைப் பயன்படுத்தியதால் சிக்கியுள்ளார். அவரது நடவடிக்கை போலீசாரால் கண்காணிக்கப்பட்டு, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் பொறியாளராக உள்ளார்.
