டெல்லி: நீட் விவகாரம், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக டெல்லியில் 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டம் தீவிரமடையும் நிலையில் மேற்குவங்கத்தில் இருந்து மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்காக அங்கு முகாமிட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் விமானம் மூலம் உடனடியாக டெல்லிக்கு வர உள்ளனர்.
