தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தஞ்சை, மார்ச் 15: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்புகள் வரை வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதன் அடிப்படையில் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தஞ்சை, திருவாருர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் விதத்தில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை முன்னுரிமை வழங்கி அனைத்து பள்ளிகளுக்கும் வழங்ககோரி, அம்மாபேட்டைக்கு ஆய்வு நடந்த வந்த தஞ்சை கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை மனு வழங்கினார். உடன் ஒன்றிய துணை செயலாளர் குருமூர்த்தி, நகர செயலாளர் ராஜாராமன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: