தஞ்சை, மார்ச் 15: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்புகள் வரை வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதன் அடிப்படையில் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தஞ்சை, திருவாருர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர்.