காஞ்சிபுரம்: ஓரிக்கையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி பால ரக்ஷனாவின் உடலுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
