சென்னை: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். விமர்சனம் செய்ய ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் திமுகவினர் அஞ்ச மாட்டார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் தவெக அரசுக்கு இல்லை என்று கூறினார்.
