சென்னை: உணவகத்துடன் குடிப்பகம் இணைந்த ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை என்று அன்புமணி கூறியுள்ளார். ரெஸ்டோ பார்கள் அமைக்க உரிமம் வழங்க தவெக அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலால் அதிர்ச்சி. அரசின் நோக்கம் என்பது மதுவை ஒழிப்பதாகவே இருக்க வேண்டும். ரெஸ்டோ பார் திறக்கப்பட்டு மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
