டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் மரண தண்டனை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமரின் ஆலோசகர் தெரிவித்தார். வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால், பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதற்காக வங்கதேசத்தின் நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில், பேட்டியளித்த ஷேக் ஹசீனா, என்னை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும்படி, வங்கதேச அதிகாரிகள் இந்தியாவுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர்.
நானும், அவாமி லீக் கட்சியின் தலைவர்களும் டிசம்ரில் வங்கதேசம் சென்று நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளோம் என்றார். ஹசீனா தாயகம் திரும்பும் திட்டத்தை வரவேற்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. வங்கதேச பிரதமரின் ஆலோசகர் ஷாகித் உர் ரகுமான் கூறுகையில்,நாங்கள் நீதியை உறுதி செய்ய விரும்புவதால், அவரது அறிவிப்பை வரவேற்கிறோம். ஹசீனா மரண தண்டனைக் கைதியாக நீதியை எதிர்கொள்ள வேண்டும். செய்த குற்றங்களுக்காக மரண தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விருப்பத்துக்கேற்ப மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.
