திருச்சி, மார்ச்13: திருச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமின் முதல் சுற்று மார்ச் 15ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று மார்ச் 22ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரையிலும், திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இமமுகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் மார்ச் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது.