கொங்கராயகுறிச்சி சிவன் கோயிலில் சண்முகநாதன் எம்எல்ஏ சுவாமி தரிசனம்

செய்துங்கநல்லூர், மார்ச் 12:  வைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கொங்கராயகுறிச்சி சிவன் கோயில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

 வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, தனது சொந்த ஊரான பண்ணைவிளைக்கு நேற்று வருகை தந்தார். பின்னர் வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்மாள் சமேத வீரபாண்டீஸ்வரர்  எனும் சட்டநாதர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

 இதில் அதிமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் காசிராஜன், கொங்கராயகுறிச்சி கிளைச் செயலாளர் வெங்கடாசலம், கோயில் உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: