தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு அங்கீகாரத்தோடு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 2,000-க்கும் மேற்பட்ட பார்களின் உரிமம் நேற்றுடன் (ஜூன் 30) நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்களின் உரிமத்தை மேலும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் பார்களின் உரிமம் முடிவடைந்து இருப்பதால் அனைத்து பார்களையும் உடனடியாக மூடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அரசு அங்கீகாரத்தோடு சுமார் 2,400 பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான தற்காலிக ஒப்பந்த நீட்டிப்பு காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன் முழுமையாகக் காலாவதியாகியுள்ளது. இந்த நிலையில், புதிய டெண்டர்கள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்படும் வரை மறு அறிவிப்பு வரும் வரை பார்களை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய டெண்டர் நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்கள் மூடப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, 2,000-க்கும் மேற்பட்ட பார்களின் உரிமக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளதாக இன்று காலையில் தகவல் வெளியானது. இதன் மூலம் எவ்வித தடையுமின்றி பார்கள் தொடர்ந்து செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உரிமம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பார்களை உடனடியாக மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: