கரூர், மார்ச் 10: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர் இபி காலனி செல்லும் சாலையில் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர் பகுதியில் இருந்து இபி காலனி மற்றும் வடக்கு காந்தி கிராமம் செல்லும் சாலையோரம் அவ்வப்போது குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரே இடத்தில் கொட்டி அகற்றப்படாமல் அங்கேயே எரிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.