மகா மாரியம்மன் கோயில் திருவிழா

பாபநாசம், மார்ச் 10: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து காவடி, பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்த குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை சந்தன காப்பு, இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: