சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவித்துள்ளார். போதைப்பொருள் உற்பத்தி, சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் எஸ்பி விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஆகியோருக்கு பதக்கம் அறிவிப்பு. காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 15 பேருக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் பதக்கங்களை வழங்குவார்.
