நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை (2011, 2016, 2021) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர், கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் பாஜகவில் இணைந்தார். விஜயதரணி ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார். பாஜ வேறு வேட்பாளரை நிறுத்திய நிலையில் அவர் தோல்வியடைந்தார்.
இருப்பினும் நடந்த முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் விஜயதரணி மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்தநிலையில் சட்டமன்றத்தில் தவெக-வின் செயல்பாடுகள் மற்றும் அதன் கொள்கைகள் பால் ஈர்க்கப்பட்டதாக விஜயதரணி தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜயதரணி தன் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார்.
காங்கிரஸ், பாஜக என தேசியக் கட்சிகளில் பயணித்த விஜயதரணி, தற்போது ஒரு மாநிலக் கட்சியில் தஞ்சமடைந்திருக்கிறார்.
