தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, கோவை, குமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: