“என் இனிய தமிழ் மக்களே” என்ற பாரதிராஜா குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: இயக்குனர் இமயம், பத்மஶ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில், இயக்குனர் இமயமான பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
.
தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு.பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: