டூவீலரில் வைத்திருந்த ₹1.40 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 7:  குந்தாரப்பள்ளி அருகே கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தவமணி (60), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை, குந்தாரப்பள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகையை அடமானம் வைத்து, ₹1.40 லட்சத்தை பெற்று, அதை ஒரு பையில் வைத்து டூவீலர் கவரில் வைத்துள்ளார். பின்னர் குந்தாரப்பள்ளி-வேப்பனஹள்ளி சாலையில் உள்ள ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே, டூவீலரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கடையில் காய்கறிகள் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, கவரில் வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: