சென்னை: முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் விஜய் கையெழுத்திட்ட, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் தொடக்க விழா ரத்தானதால் ஏமாற்றம். தலைமைச் செயலகத்திற்கு வெளியே விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியான இதற்கு, ஒத்திகை உள்பட அனைத்து வித ஏற்பாடுகளும் தயாரான நிலையில் கடைசி நிமிடத்தில் ரத்து. இதற்கான காரணமும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
