மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி இணை செயலாளர் இல்ல திருமண விழா

விராலிமலை, மார்ச் 4: விராலிமலை அருன்கார்டன் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி இணை செயலாளரும், மாவட்ட வேளாண்மை குழு உறுப்பினரான வெல்கம் மோகன்- தமிழ்செல்வி தம்பதியரின் மகனும் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநருமான அருண் பிரசாத்துக்கும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் - உமா மகேஷ்வரி தம்பதியினரின் மகள் கிருத்திகா தேவிக்கும் நேற்று காலை விவேகா பள்ளி அருகே உள்ள அரங்கத்தில் திருமணம் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் விழாவில் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். அனைவரையும் வரவேற்று வெல்கம் மோகன்- தமிழ்செல்வி மற்றும் சீனிவாசன் குடும்பத்தார்கள் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: