கூடலூர், மார்ச் 4: தமிழக- கேரள எல்லையில் உள்ளது குமுளி பகுதி. இங்குள்ள கேரள பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்ஸ்டாண்ட் மற்றும் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அடிப்படை வசதகள் ஏதுமின்றி பஸ்நிறுத்தம் கூட இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். மேலும் வனப்பகுதி எனக்கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக எல்லை பகுதியில் சாலையோரங்களில் பல ஆண்டுகளாக இருந்த கடைகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் வனத்துறை அகற்றியது. இதற்கிடையே இங்கிருந்த தமிழக புறக்காவல் நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.