வேலூர்: கணியம்பாடியில் செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் நாங்கள்தான் உள்ளோம் எங்களுக்குதான் நீங்கள் மாமூல் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டிய வீடியோவுடன் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
