தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க கெடு

தூத்துக்குடி, மார்ச் 2: தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமைதாரர்கள், தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்கள் தங்கள் வசம் உள்ள நிரப்புத்துப்பாக்கி, ரிவால்வர், பிஸ்டல், ரைபிள்,தோட்டா ரக துப்பாக்கி முதலான அனைத்து ரக துப்பாக்கிகளையும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைப்பு செய்திடவும், தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு படைக்கலன்களை மீண்டும் திரும்பப்பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு  காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறும் உரிமைதாரர்கள் மீது படைக்கலச்சட்டம் மற்றும் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: