எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை சந்திக்க வந்த நிர்வாகிகள்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை சந்திக்க வருகை தந்துள்ளனர். எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க நாளை சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தொண்டர்கள் கவலையடைந்துள்ளார்.

Related Stories: