மும்பை: மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தர்பூசணி பழத்தில் கலந்திருந்த எலி மருந்து விஷமே காரணம் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்லா தொகாடியா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி பழம் சாப்பிட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 4 பேரின் மரணம் தற்செயலா அல்லது திட்டமிட்ட சதியா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
