அரசு விளையாட்டு விடுதியில் சேரும் மாணவர்களுக்கான போட்டிகள்

 

 

திருப்பூர்,மே 8: அரசின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7,8,9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நேற்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை மாவட்ட விளையாட்டு அதிகாரி ரகுகுமார் தொடங்கி வைத்தார். இதில் பளு தூக்குதல், குத்துச்சண்டை,ஓட்டப்பந்தய வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்ற அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள்.
இதற்கிடையே இதனை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமும் ஏற்பட்டது. இதில் போட்டியின் போது காயம் ஏற்பட்டவர்களுக்கும், வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.ஆர்.எஸ். கரைசலும் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாணவிகளுக்கு இந்த தேர்வு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

Related Stories: