குடிபோதையில் வாலிபர் மண்டையை உடைத்தவருக்கு வலை

நாமகிரிப்பேட்டை, மே 1: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே, தொட்டியபட்டி குறுக்குத் தெருவில், சாய்குமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம், போதை தலைக்கேறிய சாய்குமார், அப்பகுதியில் சென்று கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினார். ஆம்னி கார், லோடு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய அவர், அதே பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (19) என்பவரின், மண்டையை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தார். இதில் மண்டை உடைந்த ரித்தீஷ், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சாய்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: