மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 7வது நாளாக நீர்வரத்து, விநாடிக்கு 1,500 கனஅடியாக நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,075 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,029 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 80.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 80.52 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 42.48 டிஎம்சியாக உள்ளது.
