நியூயார்க்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் வரும் ஜூன் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் ஆட பலம் வாய்ந்த இத்தாலி அணி தகுதி பெற முடியாமல் போனது.
அதேவேளை, ஈரான் அணி தகுதி போட்டிகளில் வென்று உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமான மூத்த பிரதிநிதி ஒருவர், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரானுக்கு மாற்றாக இத்தாலி அணியை சேர்க்கும்படி, ஃபிபா அமைப்பை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
