தென்காசி, பிப்.24: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 348 பெண்கள் உள்பட 364 பேரை போலீசார் கைதுசெய்தனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக நேற்று கருப்பு உடை அணிந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.