ராஜபாளையத்தில் அடுத்தடுத்து டூவீலர்களில் மோதிய காரால் பரபரப்பு

ராஜபாளையம், பிப்.21: திருச்சியில் இருந்து தென்காசிக்கு 4 பேர் காரில் சென்றனர். அவர்கள் ராஜபாளையம் இளந்தோப்பு அரசு மருத்துவமனை அருகே சென்றபோது  கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அடுத்தடுத்து வந்த 3 டூவீலர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. விசாரணையில் புத்தூரைச் சேர்ந்த மாரியப்பன்(53), கிருஷ்ணாபுரம் அறிவழகன்(48), ராஜபாளையம் மாலையாபுரம் ஜான்சன்(22) மற்றும் தங்கராஜ்(46) என தெரிய வந்தது. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காரை ஓட்டி வந்தவர்கள் இறங்கி தப்பி ஓடியதால் அவர்கள் யார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: