சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் அவசர முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மாம்பழம் சின்னத்தை முடக்க மறுத்து உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் நேற்று ஆணையிட்டிருந்தது.

