மதுரை, பிப். 19: கொரோனா ஊரடங்கால் கடை அடைக்கப்பட்ட காலத்திற்கும் வாடகை பாக்கி கேட்ட நகராட்சி நோட்டீசிற்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், போடி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த னிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: போடி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை வைத்துள்ளேன். இதற்காக மாதம் வாடகையாக ரூ.11,800 நகராட்சிக்கு செலுத்துகிறேன். கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் 25 முதல், இந்தாண்டு ஜன.3 வரை கடை மூடப்பட்டது. இதன் பிறகு ஜன.3 முதல் தான் டீக் கடையை மீண்டும் நடத்தி வருகிறேன். இந்நிலையில், வாடகை பாக்கி ரூ.1,88,800ஐ உடனடியாக செலுத்துமாறு நகராட்சி ஆணையர் கடந்த டிச.30ல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். உடனடியாக பாக்கியை செலுத்தாவிட்டால் கடையை பூட்டிவிடுவதாக நகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.