ராஜபாளையம், ஏப்.1: ராஜபாளையத்தில் வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், அன்னப்பராஜா சோதனைச் சாவடி மற்றும் தளவாய்புரம் சோதனைச் சாவடி அருகில் பறக்கும் படைக் குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், செட்டியாபட்டி கிராமம் தளவாய்புரத்தில் அமைந்துள்ள அம்மையப்ப நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் 181, 182, 185, 186 ஆகியவற்றை பொதுத் தேர்தல் பார்வையாளர் உதயன் மிஸ்ரா ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை பரிசோதித்தனர். தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
