×

மறியலில் ஈடுபட்ட 95 பேர் மீது வழக்கு

வருசநாடு, ஏப். 1: கடமலைக்குண்டு அருகே உள்ள தேவராஜ்நகரில் ஸ்ரீசீதாளகாளியம்மன் கோயிலுக்கு அன்னதான தகர செட் அமைப்பதற்கு தடை விதித்ததை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் தேனி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி டி.எஸ்.பி சிவசுப்பு, ஆண்டிபட்டி தாசில்தார் ஜாகிர் உசேன், கடமலைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து போகும்படி பொதுமக்களை அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேவராஜ்நகரை சேர்ந்த 95 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags : Varusanadu ,Theni ,Sri Seethalakaliamman ,temple ,Devarajnagar ,Kadamalaikundu ,
× RELATED பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி...