பாளை.யில் இன்று செயல்வீரர்களுடன் கனிமொழி கலந்தாய்வு

நெல்லை, ஏப். 1: மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளருமான அப்துல் வஹாப் எம்எல்ஏவை ஆதரித்து, பாளை. சட்டமன்றத் தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பாளையில் இன்று மாலை நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக ெபாறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ திமுக வேட்பாளராக 2ம் முறையாக போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏவை ஆதரித்து பாளை. சட்டமன்றத் தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பாளை. வஉசி மைதானம் அருகேயுள்ள பிபிஎல் திருமண மண்டபத்தில் இன்று (1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்பி பங்கேற்று பேசுகிறார். இக் கூட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து கட்சிகளின் செயல்வீரர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல நெல்லை சட்டமன்றத் தொகுதி மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் நாளை (2ம் தேதி) காலை 9 மணிக்கு பேட்டை சாலை கோடீஸ்வரன்நகர் ராஜா மஹாலில் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.